உள்ளூர் செய்திகள்

செல்போன் டவர்கள் மாயம்

Published On 2023-08-30 08:34 GMT   |   Update On 2023-08-30 08:34 GMT
  • விருதுநகர் அருகே செல்போன் டவர்கள் மாயமானது.
  • அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணறு பகுதியில் ராம்குமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைத்திருந்தது. அதற்கான உபகர ணங்களும் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் அந்த செல்போன் டவர் மற்றும் உபகரணங்கள் காணாமல் போயின. யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ. 30 லட்சத்து 38 ஆயிரத்து 638 ஆகும்.

அதேபோல் கல்குறிச்சி பகுதியில் செல்போன் டவர் அமைக்கப் பட்டிருந்தது. அங்கிருந்த செல்போன் டவர் மற்றும் உபகரணங்க ளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.30 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். செல்போன் டவர்கள் காணாமல் போனது குறித்து தனியார் நிறுவன மேலாளர் முத்துவெங்கடகிருஷ்ணன் விருதுநகர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின்பேரில் மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அருப்புக்கோட்டை பாலையம்பட்டி பகுதியில் சென்னையை சேர்ந்த மற்றொரு நிறுவனம் செல்போன் டவர் அமைத்திருந்தது. அந்த செல்போன் டவரை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதன் மதிப்பு ரூ.20 லட்சத்து 24 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக தனியார் நிறுவனத்தை சேர்ந்த ரமேஷ்குமார், அருப்புக் கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின்பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News