உள்ளூர் செய்திகள்

நரிக்குடி சேர்மனுக்கு அரசு சார்பில் கார்

Published On 2023-07-23 08:45 GMT   |   Update On 2023-07-23 08:45 GMT
  • நரிக்குடி சேர்மனுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்பட்டுள்ளது.
  • வளர்ச்சி திட்ட பணிகள் நேரில் சென்று கண்காணிக்கப்படுகிறது.

திருச்சுழி

தமிழகத்திலுள்ள அனைத்து ஒன்றிய சேர்மன்களுக்கும் அந்தந்த ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் சென்று கண்காணிக்கும் பொருட்டு புதிய ஸ்கார்பியோ கார்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஊராட்சி ஒன்றிய சேர்மனுக்கு நரிக்குடி ஒன்றியங்களில் மேற் கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று கண்காணிக்கும் பொருட்டு புதியதாக ஸ்கார்பியோ கார் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒன்றிய பொது நிதியின் கீழ் சுமார் ரூ.12 லட்சத்து 81 ஆயிரம் வழங்கப்பட்டது. நரிக்குடி ஒன்றிய சேர்மனுக்கு புதிய ஸ்கார் பியோ கார் கொடுத்த நிலையில் தற்போது பல வருடங்களாக பயன்படுத்தி வந்த பழைய டாடா சுமோவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News