உள்ளூர் செய்திகள்

கார்-பஸ் மோதல்; கணவன்-மனைவி பலி 2 குழந்தைகள் படுகாயம்

Published On 2022-07-09 09:53 GMT   |   Update On 2022-07-09 09:53 GMT
  • கார்-பஸ் மோதிய விபத்தில் கணவன்-மனைவி பலியானார்கள்,2 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
  • விருதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர்

சென்னை அருகே உள்ள பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது 37). இவர் அதே பகுதியில் உள்ள பிரபல மோட்டார் விற்பனை நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நிதாஷா (32). இவர்களுக்கு ஜெனிதாஸ்ரீ (9) என்ற மகளும் பிரணவ் ஆதித்யா (4) என்ற மகளும் உள்ளனர்.மனோஜின் சொந்த ஊர் நெல்லை ஆகும்.

இன்று அதிகாலை மனோஜ் தனது மனைவி, குழந்தைகளுடன் காரில் நெல்லைக்கு புறப்பட்டார். காரை மனோஜ் ஓட்டினார்.

இன்று மதியம் விருதுநகர் 4 வழிச்சாலையில் கார் வந்துகொண்டிருந்தது. எம்.ஜி.ஆர். சாலை சந்திப்பில் வந்தபோது சாத்தூரில் இருந்து விருதுநகருக்கு பயணிகளை ஏற்றி வந்த பஸ் 4 வழிச்சாலையில் திடீரென திரும்பியது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த மனோஜ் ஓட்டி வந்த கார் பஸ் மீது பயங்கரமாக மோதியது.

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் பயணித்த மனோஜ், நிதாஷா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஜெனிதாஸ்ரீ, பிரணவ் ஆதித்யா படுகாயம் அடைந்தனர். காருக்குள் சிக்கியிருந்த அவர்களை அப்பகுதியினர் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக விருதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News