உள்ளூர் செய்திகள்

தேர்வர்கள் குரூப்-4 இலவச மாதிரி தேர்வு

Published On 2022-07-22 08:03 GMT   |   Update On 2022-07-22 08:03 GMT
  • தேர்வர்கள் குரூப்-4 இலவச மாதிரி தேர்வு எழுதி பயன்பெறலாம்.
  • ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம்.

விருதுநகர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 7,301 காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு (குரூப் 4) வருகிற 24-ந் தேதி நடக்கிறது.

இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில், மாநில அளவிலான இலவச குரூப்-4 மாதிரி தேர்வு கடந்த 15-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

நாளை (23-ந் தேதி) வரை இணையதளம் வாயிலாக மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் தேர்வு மேற்கொள்ளலாம். இம்மாதிரி தேர்வு எழுத விரும்பும் தேர்வர்கள் (www.tncareerservices.tn.gov.in) என்ற இணையதளத்தில் நுழைந்து தேர்வு எழுதி பயன் பெறலாம். ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம்.

மேலும் இவ்வலைத ளத்தில் பல்வேறு தேர்வுக ளும் இடம் பெற்றுள்ளன. TNPSC குரூப்-4 தேர்வை பயமின்றி எளிதில் எதிர்கொள்ள இந்த இலவச மாதிரி தேர்வை எழுதி தேர்வர்கள் பயன்பெறுமாறு கலெக்டர் மேகநாதரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தகவலுக்கு 04562-293613 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News