உள்ளூர் செய்திகள்

வேறொரு பெண்ணுடன் பழகிய கணவர் மீது தாக்குதல்

Published On 2023-06-24 07:49 GMT   |   Update On 2023-06-24 07:49 GMT
  • வேறொரு பெண்ணுடன் பழகிய கணவர் மீது தாக்குதல் நடந்தது.
  • டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

சிவகாசி மாரிமுத்து தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமாா(வயது33). இவரது மனைவி வைரமுத்து செல்வி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். இவர்களது விவாகரத்து வழக்கு சிவகாசி கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்தநிலையில் சம்பவத்தன்று விளாம்பட்டி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் ஜெயக்குமார் ஒரு பெண்ணுடன் சாப்பிட வந்திருந்தார். இதைப்பார்த்த வைரமுத்து செல்வி மற்றும் அவரது உறவினர்கள் ஜெயக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த வைரமுத்துசெல்வி உள்பட 3 பேர் ஜெயக்குமாரை தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிவகாசி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் மாரீஸ்வரி(வயது32). கருத்து வேறுபாடு காரணமாக கணவர் கலைசங்கரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களது விவாகரத்து வழக்கும் கோர்ட்டில் நடந்து வருகிறது.

சம்பவத்தன்று மாரீஸ்வரி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த கலைசங்கர் மனைவியிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News