உள்ளூர் செய்திகள்

கலை இலக்கிய பெருமன்ற கூட்டம்

Published On 2022-08-02 14:23 IST   |   Update On 2022-08-02 14:23:00 IST
  • கலை இலக்கிய பெருமன்ற கூட்டம் நடைபெற்றது.
  • எம்.என்.டி.ஏ ஆரம்பப் பள்ளியில் நடந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளையின் 230-வது எழுத்தாளர் சந்திப்பு மற்றும் படைப்பரங்கக் கூட்டம் எம்.என்.டி.ஏ ஆரம்பப் பள்ளியில் நடந்தது. கிளைத் தலைவர் கோதையூர் மணியன் தலைமை தாங்கினார். நூலகர் கந்தசாமி பாடல்கள் பாடினார்.

கவிஞர் சந்திரசேகர் வரவேற்றார். உடுமலைப்பேட்டை கவிஞர் ஆருத்ரா எழுதிய 'சக்கர வாகம்' என்ற கவிதைத் தொகுப்பு குறித்து, அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் சிவநேசன், பேராசிரியர் திருநாவுக்கரசு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவர் செண்பகராஜன், பொருளாளர் நித்யா, சிலம்பாட்டக் கலைஞர் காயத்ரி, கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன உதவிப் பேராசிரியர் சங்கீதா ஆகியோர் பேசினர். 'கவிதையும் பாடலும்' என்ற தலைப்பில் புலவர் சிவனணைந்தபெருமாள் பேசினார்.

நூலாசிரியர் ஆருத்ரா ஏற்புரை வழங்கினார். 'தமிழ்நாடு முதலமைச்சர் காமராஜரும், எதிர்க்கட்சி தலைவர் ஜீவானந்தம் ஆகியோரின் நட்பு இலக்கிய இலக்கணம்' என்ற தலைப்பில் பேராசிரியர் காளியப்பன் பேசினார். அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் பொன்னுராஜன், சமூகநல ஆர்வலர் துள்ளுக்குட்டி, தங்கமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அடைக்கலம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News