உள்ளூர் செய்திகள்

ரெயில் மோதி வாலிபர் சாவு

Published On 2023-05-19 08:43 GMT   |   Update On 2023-05-19 08:43 GMT
  • ரெயில் மோதி வாலிபர் இறந்தார்.
  • கிராம நிர்வாக அதிகாரி கேசவன் போலீசில் புகார் செய்தார்.

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கேத்த நாயக்கன்பட்டியில் உள்ள ரெயில்வே தண்டவாள பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த விருதுநகர்- காரைக்குடி பயணிகள் ரெயிலை அந்த வாலிபர் கவனிக்கவில்லை.

இதன் காரணமாக ரெயில் மோதியதில் அந்த வாலிபர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக சென்னிலைக்குடி கிராம நிர்வாக அதிகாரி கேசவன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? விபத்தா? தற்கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News