உள்ளூர் செய்திகள்

தொடர் ஜோதி ஊர்வலம்

Published On 2022-11-09 07:31 GMT   |   Update On 2022-11-09 07:31 GMT
  • ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் தொடர் ஜோதி ஊர்வலம் நடந்தது.
  • இந்த நிகழ்ச்சியில் சிலம்பம் விளையாட்டு கலைஞர்களுக்கு நகர்மன்றத் தலைவர் சான்றிதழ் வழங்கினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிவகாசியில் இருந்து கொண்டு வரப்பட்ட தொடர் ஜோதி ஊர்வலத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றதலைவர் தங்கம் ரவிக்கண்னண் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மேலும் கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய சுகாதார ஊழியர்கள், தீயணைப்பு துறை, நகராட்சி ஊழியர்கள்,ரோட்டரி சங்கத்தினர்கள் மற்றும் தன்னார்வ பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இதில் துணைத் தலைவர் செல்வமணி, ஆணையாளர் ராஜமாணிக்கம் சிவகாசி சுகாதார மாவட்ட துணை இயக்குநர் கலுசிவலிங்கம், மேலாளர் பாபு, பொறியாளர் தங்கப்பாண்டியன், நகர் நல அலுவலர் கவிப்ரியா, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜெயதீபா, சுகாதார ஆய்வாளர் சரவணன் மற்றும் பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் சிலம்பம் விளையாட்டு கலைஞர்களுக்கு நகர்மன்றத் தலைவர் சான்றிதழ் வழங்கினார்.

Tags:    

Similar News