உள்ளூர் செய்திகள்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்

Published On 2023-01-13 09:07 GMT   |   Update On 2023-01-13 09:07 GMT
  • முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
  • ஏற்பாடுகளை துணை முதல்வர் சுரேஷ் மற்றும் விரிவுரையாளர் செய்திருந்தனர்.

ராஜபாளையம்

ராஜபாளையம் என்.ஏ.மஞ்சம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் 1985-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ-மாணவிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. தாளாளர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் பிச்சையாபிள்ளை வரவேற்றார். கல்லூரி இயக்குநர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார்.

என்.ஏ. அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர் சங்க அமைப்பின் தலைவராக ஜெயசுதா, செயலாளராக மணிகண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் என்.ஏ.ராமச்சந்திர ராஜா குருகுலத் தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்தி ராஜா, அறக்கட்டளை உறுப்பினர் என்.கே.ராம்விஷ்ணுராஜா, என்.கே.ராம்வெங்கட்ராஜா மற்றும் ராஜஸ்ரீ, ராகஜோதி ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் முன்னாள் மாணவர் சங்கத் தொடர்பு அலுவலர் பூங்கொடி நன்றி கூறினார். ஏற்பாடுகளை துணை முதல்வர் சுரேஷ் மற்றும் விரிவுரையாளர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News