உள்ளூர் செய்திகள்

இளம்பெண்கள் 3 பேர் மாயம்

Published On 2023-01-06 08:20 GMT   |   Update On 2023-01-06 08:20 GMT
  • இளம்பெண்கள் 3 பேர் மாயமானாகள்.
  • இதுகுறித்து விருதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

விருதுநகர்

சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு கவிதா (19) என்ற மகள் உள்ளார். கவிதா எலெக்ட்ரிக்கல் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடையில் உடன் வேலைபார்க்கும் செல்வக்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் காலை யில் வழக்கம்போல வேலைக்குச் சென்ற கவிதா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து தாய் ராணி அளித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மரியபுஷ்பவள்ளி (49). இவரது மூத்த மகள் எம்.எஸ்.சி. படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். அவருக்கு திருமண ஏற்பாடுகளை தொடங்கியுள்ளனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவரைக் காதலிப்பதாகவும், அவரைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் மகள் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு மரிய புஷ்பவள்ளி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் அதிருப்தி அடைந்த அவர் சுவற்றில் பலமாக பலமுறை முட்டி யுள்ளார். இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை அளிப்பதற்காக அருகில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு மரிய புஷ்பவள்ளி மகளை அழைத்துச் சென்றார்.

அப்போது மருந்துச்சீட்டு வாங்கிவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது மகளைக் காணவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து மரியபுஷ்பவள்ளி அளித்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

விருதுநகர் அருகே உள்ள அச்சங்குளம் பகுதியை சேர்ந்தவர் சூசை முத்து (38).இவர்து மகள் சாத்தூரியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை சூசை முத்து அளித்த புகாரின் பேரில் ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News