உள்ளூர் செய்திகள்

ஓடும் பஸ்களில் பர்தா அணிந்து நகை திருடிய 2 பெண்கள் கைது

Published On 2023-08-21 07:03 GMT   |   Update On 2023-08-21 07:03 GMT
  • ஓடும் பஸ்களில் பர்தா அணிந்து நகை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
  • ஓடும் பேருந்துகளில் பலரிடம் நகை திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்காபுரம் கிரா மத்தை சேர்ந்தவர் சரோஜா (வயது 75). இவர் பேருந்தில் பயணம் செய்தார். அப் போது அவருக்கு அருகில் பர்தா அணிந்து வந்தி ருந்த 2 பெண்கள் பயணம் செய்த–னர்.

மேலும் அந்த 2 பேரும், சரோஜாவுக்கு உதவி செய் வது போல் தங்களை காட் டிக்கொண்டனர். அதனை நம்பிய சரோஜாவும் அதனை ஏற்றுக்கொண்டார். இதையடுத்த சிறிது நேரத்தில் அவர்கள் கீேழ இறங்கி சென்றனர்.

பின்னர் சரோஜா பார்த்த போது அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் நகை மாய மாகி இருந்தது. அப்போது தான் அருகில் நின்ற பெண் கள் திருடிது தெரிந்தது. இதுகுறித்து சரோஜா, விருதுநகர் மேற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பே ரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதேபோல், அருப்புக் கோட்டை தனியார கல்லூரி–யில் படித்த வருமை் மாணவி நந்தினி என்பவர் விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு அரு கில் உரசியபடி நின்ற வாறு பர்தா அணிந்து கொண்டு பயணம் செய்த 2 பெண்கள் பாலவநத்தம் பஸ் நிறுத்தத் தில் இறங்கி சென்றனர்.

அதன்பின்னரே நந்தினி கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் செயின் திருடப்பட்டி ருப்பது தெரியவந்தது. இதுபற்றி அவர் கொடுத்த புகாரின்பேரில் அருப்புக் கோட்டை தாலுகா போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் விருதுந கர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சீனிவாசபெரு மாள் உத்தரவின்பேரில் விருதுந கர் துணை போலீஸ் சூப்பி ரண்டு பவித்ரா தலைமை யில் தனிப்படை அமைத்து தீவிரமாக காண்காணித்து வந்தனர். அப்போது விருது நகர் பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பர்தா அணிந்து நின்ற 2 ெபண்களை பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர்கள் மதுரை வண்டியூரை சேர்ந்த ரேகா (38), அமலா (37) என்பதும், ஓடும் பேருந்துகளில் பலரி டம் நகை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். அவர்களிட் இருந்து திருடிய நகைகள் பறிமுதல் செய்யப் பட்டன. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

Tags:    

Similar News