உள்ளூர் செய்திகள்

சிற்பக்கூட ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2023-11-15 07:08 GMT   |   Update On 2023-11-15 07:08 GMT
  • விருதுநகர் அருகே சிற்பக்கூட ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி(வயது58). அங்குள்ள சிற்பக்கூடம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் சிற்பக்கூடத்தில் பணியில் இருந்தபோது தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றினர்.

இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு கார் ஷெட்டில் உள்ள வாட்ச்மேன் அறையில் தூக்கில் தொங்கியபடி இருப்பதாக அவரது மனைவிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மனைவி, உறவினர்களுடன் அங்கு சென்று அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் பாண்டியன் நகர், கே.டி.கே. தங்கமணி காலனியை சேர்ந்தவர் ராமர்(வயது50). இவர் தனக்கு அடிக்கடி தற்கொலை எண்ணம் ஏற்படுவதாக மனைவியிடம் கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவரது மகன் ஹரி முனீஸ்வரன், பாண்டியன் நகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News