உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம். 

திட்டக்குடி அருகே கிராம மக்கள் சாலை மறியல்

Published On 2023-11-05 07:46 GMT   |   Update On 2023-11-05 07:46 GMT
  • திட்டக்குடி அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
  • போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடலூர்:

திட்டக்குடி அருகே100 நாள் வேலை திட்டத்தில் கள ஆய்வின்போது இல்லாத பணியாளர்களுக்கு வருகை பதிவேட்டில் விடுப்பு என குறிப்பிடப்பட்டதால் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவட்டி ற்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் உள்ள பணிகளை ஆய்வு செய்வதற்காக மங்களூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து பணியில் இல்லாதவர்களை வருகை பதிவேட்டில் விடுப்பு என அறிவித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆவட்டி- திட்டக்குடி சாலையில் திடீர் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் சாலை மறியல் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News