உள்ளூர் செய்திகள்

ஆற்றை கடக்க வேண்டாம் என வைக்கப்பட்ட எச்சரிக்கை பலகை.

திண்டுக்கல் அருகே ஆற்றில் வெள்ளப்பெருக்கால் தனித்தீவான கிராமம்

Published On 2022-11-13 10:59 IST   |   Update On 2022-11-13 10:59:00 IST
  • தற்போது பெய்து வரும் ெதாடர்மழையால் குடகனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
  • மழைக்காலங்களில் தீராத இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இப்பகுதியில் மேம்பாலம் கட்டவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாடிக்கொம்பு:

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு ஆத்துப்பட்டியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் குடகனாற்றை கடந்துதான் ஊருக்குள் செல்ல வேண்டும். மேலும் பல்வேறு தேவைக்களுக்காக திண்டுக்கல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

மழைக்காலங்களில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் ஆற்றை கடக்க சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் தாடிக்கொம்பு பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் இதனை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது பெய்து வரும் ெதாடர்மழையால் குடகனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

இதனால் ஆற்றை கடக்க முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் ஆற்றை கடக்ககூடாது என எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக சென்றால் தனியார் நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்கள் வழியாக பொதுமக்கள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்துப்பட்டி கிராமம் தனித்தீவானது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கையில்,

மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கிராம மக்கள் வெளிப்பகுதிகளுக்கு செல்ல முடியாமல் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

ஏற்கனவே 3 முறை மேம்பாலம் கட்டக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டோம். மேலும் ரேசன் கார்டு ஒப்படைப்பு போராட்டத்திலும் பொதுமக்கள் ஈடுபட்டனர். ஆனால் தீர்வு காணப்படாததால் பெரும்பலான குடும்பத்தினர் கிராமத்தை விட்டு வெளியேறி சென்றுவிட்டனர். ஆனால் மற்ற பொதுமக்கள் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருவதால் அங்கேயே தங்கி உள்ளனர்.

மழைக்காலங்களில் தீராத இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இப்பகுதியில் மேம்பாலம் கட்டவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News