உள்ளூர் செய்திகள்

விஜயகாந்த் பிறந்தநாள்: தென் சென்னை வடக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்

Published On 2023-08-29 10:41 GMT   |   Update On 2023-08-29 11:10 GMT
  • மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் மற்றும் மதிய உணவு சாம்பார் சாதம், தயிர் சாதம், பிரியாணி ஆகியவையும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
  • மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் தங்கத்தேர் இழுக்கப்பட்டது.

சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி தென்சென்னை வடக்கு மாவட்டம் சைதை பகுதியில் 139 140 168 170 172 வட்டங்களிலும், மயிலை பகுதியில் 122, 171 ஆகிய வட்டங்களிலும் கொடியேற்றுதல், பெயர் பலகை திறந்து வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் மற்றும் மதிய உணவு சாம்பார் சாதம், தயிர் சாதம், பிரியாணி ஆகியவையும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் தங்கத்தேர் இழுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர்களாக தலைமை கழக உயர்மட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கழக செயலாளர் வி.சி.ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தே.மு.தி.க. நிர்வாகிகள் அகமது, புண்ணியமூர்த்தி, மடுவை சுப்பு, சைன்.ராஜ்குமார், பிரஸ் பாஸ்கர், பூக்கடை கந்தன், தமிழ்ச்செல்வன், கோட்டை ரவி, வாட்டர் வாஷ் குமார், ஏழுமலை, ஆறுமுகம், ராஜன், நரசிம்மன், துரை மற்றும் மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News