உள்ளூர் செய்திகள்

தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நீதித்துறை, அரசுத்துறை அலுவலர்களுடன் விழிக்கண் குழு கூட்டம் நடைபெற்றது.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விழிக்கண் குழு கூட்டம்

Published On 2023-01-02 10:05 GMT   |   Update On 2023-01-02 10:05 GMT
  • தாசில்தாரிடம் இருந்து சாதிச்சான்றிதழ் நிலுவை பட்டியல் போன்ற பல்வேறு கருத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
  • ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் முன்னிலையில் நீதித்துறை, அரசுத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் விழிக்க ண் குழுக் கூட்டம் நடை பெற்றது.

கூட்டத்தில் தலைமை கொறடா கோவி செழியன் பேசியதாவது:-

உண்மைக்கு புறம்பான வழக்குகள், முந்தைய கூட்டத்தில் இறுதி

செய்யப்படாதவை, உண்மைக்கு புறம்பான வழக்குகள், புதிதாக ஆய்வுக்கு வைக்கப்படும் வழக்குகள், புலன் விசாரணை வழக்குகள் மொத்த வழக்குகள், நீதிமன்ற விசாரணையில் உள்ள , விசாரணை முடிவுற்ற வழக்குகள்,

தீருதவித்தொகை நிலுவை, தாசில்தாரிடம் இருந்து சாதிச்சான்றிதழ் நிலுவை பட்டியல் போன்ற பல்வேறு கருத்துக்கள்கு றித்து பொருள் விவாதிக்கப்பட்டது.

விவாதிக்கப்பட்ட அனைத்து பணிகளும் விரைவாக தரமாகவும் முடித்திட சம்ப ந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் முன்னேற்றம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்குவதுடன் தேவையான கட்டமைப்புகள், விடுதிகளில் விளையாட்டு வசதிகள், நூலகம், போட்டி தேர்வுக்கான வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு தலைமை கொறடா கோவி செழியன் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா, தாட்கோ மாவட்ட மேலாளர் ரங்கராஜன், திருவிடைமருதூர் ஒன்றிய குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு, அரசு சிறப்பு வழக்கறிஞர் இளஞ்செழியன், வழக்கறிஞர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News