உள்ளூர் செய்திகள்

தனியார் பள்ளி விடுதியில் 2 மாணவர்கள் திடீர் மயக்கம்

Published On 2023-03-28 14:55 IST   |   Update On 2023-03-28 14:55:00 IST
  • மாங்காய், புளி சாதம் சாப்பிட்டதால் ஏற்பட்டதாக டாக்டர்கள் தகவல்
  • ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை

வேலூர்:

காட்பாடி கசம் பகுதியில் தனியார் பள்ளி விடுதி இயங்கி வருகிறது. இங்கு 52 மாணவர்கள் தங்கியுள்ளனர். இன்று காலை உணவு சாப்பிட்ட பிறகு மாணவர்கள் 2 பேருக்கு திடீரென வயிற்றுப் போக்கு, மயக்கம் ஏற்பட்டது.

உடனடியாக அவர்களை மீட்டு பள்ளிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மாங்காய் மற்றும் புளி சாதம் சாப்பிட்டதன் காரணமாக மாணவர்களுக்கு வயிற்றுப்போக்கு மயக்கம் ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து விடுதியில் உள்ள மாணவர்களை கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News