உள்ளூர் செய்திகள்

பைக் திருடிய வாலிபர் கைது

Published On 2023-05-19 13:40 IST   |   Update On 2023-05-19 13:40:00 IST
  • காட்பாடி ரெயில் நிலையத்தில் மடக்கி பிடித்தனர்
  • 4 வாகனங்கள் பறிமுதல்

வேலூர்:

காட்பாடி அடுத்த சோழாமூரை சேர்ந்தவர் வைரமுத்து (வயது 36).

இவர் காட்பாடி திருவலம் கே வி குப்பம் லத்தேரி குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பைக் திருடி வந்தார்.

இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை வைரமுத்து காட்பாடி ரெயில் நிலையத்தில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ரெயில் நிலையத்திற்கு சென்ற போலீசார் அங்கு பதுங்கி இருந்த வைரமுத்துவை மடக்கி பிடித்தனர்.

அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர் பல்வேறு இடங்களில் பைக் திருடியதை ஒப்புக்கொண்டார்.

அவர் கொடுத்த தகவலின் அவரிடமிருந்த 4 பைக்குகளை பறிமுதல் செய்தனர். வைரமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News