உள்ளூர் செய்திகள்

வேலூர் கோர்ட்டில் பெண் போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

Published On 2023-10-07 09:50 GMT   |   Update On 2023-10-07 09:50 GMT
  • வழக்கிலிருந்து விடுவிக்கும்படி மிரட்டல்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

வேலூர்:

ஊசூர் அருகே உள்ள பெரியதெள்ளுர் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகேசன் (வயது 32). இவர் அதே பகுதியில் உள்ள பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றி உள்ளார்.

இது தொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு வேலூர் கோர்ட்டில் நடந்தது.

இந்நிலையில் வழக்கில் ஆஜர் ஆவதற்காக அழகேசன் நேற்று கோர்ட்டிற்கு வந்தார்.

அப்போது வழக்கிலிருந்து விடுவிக்கும்படி வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் லதாவிற்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து சத்துவாச்சாரி போலீஸ நிலையத்தில் அழகேசன் மீது லதா புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்த அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News