காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் இளம் பெண் மர்ம சாவு
- கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்
- போலீசார் விசாரணை
பேரணாம்பட்டு:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு திரு.வி.க நகரை சேர்ந்தவர் ராஜா, கூலித்தொழிலாளி. இவரது மகள் ராஜேஷ்வரி (வயது19). இவர் பேரணாம்பட்டு ரங்கம்பேட்டை பகுதி யைச் சேர்ந்த ஸ்ரீதர் (20) என்பவரை கடந்த 2 ஆண் டுகளாக காதலித்து வந்தார். இருவரும் கடந்த 3 மாதங் களுக்கு முன்பு பெற்றோர் சம்மதமின்றி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து, ஸ்ரீதரின் வீட்டில் இருவரும் வாழ்ந்து வந்தனர். திருமணம் செய்து கொண்ட நாள் முதலே தம்பதிகளுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் ஸ்ரீதர், ராஜேஷ்வரிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. வேதனையது டைந்த ராஜேஷ்வரி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீதர், ராஜேஷ்வரியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் தாய் வீட்டிற்கும் செல்லாதது தெரியவந்தது. ராஜேஷ்வரியை, ஸ்ரீதர் பல இடங்களில் தேடியுள்ளார்.
இதற்கிடையில், ரங்கம் பேட்டை அடுத்த கோக்கலூர் விவசாய கிணற்றில் ராஜேஸ்வரி பிணமாக கிடந்தார். அவரது முகம் கை கால்களில் துணி சுற்றி இருந்தது.
இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத் தினர். மேலும் தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராஜேஷ்வரியின் முகம் கை, கால்களை கட்டி கிணற்றில் வீசி கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
ராஜேஷ்வ ரியின் தந்தை ராஜா, தனது மகள் இறப்பில் சந்தேகம் உள்ளது, இதற்கு காரண மான குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று பேரணாம்பட்டு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்ற னர்.
திருமணமாகி 3 மாதங்களே ஆன நிலையில் புதுப்பெண் கொலை செய்யப்பட்டுள்ள தால், குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், டி.எஸ்.பி. ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.