உள்ளூர் செய்திகள்

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தீவிரம்

Published On 2022-10-15 09:42 GMT   |   Update On 2022-10-15 09:42 GMT
  • வீடு, வீடாக சென்று மேற்கொள்ளப்பட உள்ளது
  • கலெக்டர் அறிவிப்பு

வேலூர்:

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வீடு, வீடாக சென்று ஆதார் எண்ணை பெற்று இணைய வழியில் மொபைல் ஆப் மூலம் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் 12 லட்சத்து 68 ஆயிரத்து 875 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களின் இதுவரை 6 லட்சத்து 36 ஆயிரத்து 737 வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.

இப்பணியை விரைந்து முடிக்கும் பொருட்டு இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அன்று சிறப்பு பணியாக அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று ஆதார் எண் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இதுவரை ஆதார் எண்ணை இணைக்காத பொதுமக்கள் இதனை பயன்படுத்தி இணைத்துக்கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News