உள்ளூர் செய்திகள்

மருத்துவமனையில் குழந்தை இறந்து பிறக்க காரணம் என்ன?

Published On 2022-11-12 13:39 IST   |   Update On 2022-11-12 13:39:00 IST
  • மாறி, மாறி குற்றச்சாட்டு வைத்தனர்
  • மருத்துவ பணிகள் இணை இயக்குனர் விசாரணை

வேலூர்:

வேலூர் மாங்காய்மண்டி பகுதியை சேர்ந்தவர் கரண் (வயது 25). இவரது மனைவி சிவசக்தி. இவர் மக்கான் பகுதியில் உள்ள சுகாதார நிலையத்துக்கு பிரசவத்துக்காக நேற்று முன்தினம் அழைத்துச் சென்றனர்.

பின்னர் அவரை பென்லேன்ட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு குழந்தை இறந்து பிறந்தது. இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கண்ணகி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பானுமதி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், குழந்தை இறந்ததற்கு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களின் கவனக்குறைவு தான் என்று ஒருதரப்பினரும், பென்லேன்ட் மருத்துவமனையில் முறையாக பிரசவம் பார்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மற்றொரு தரப்பினரும் மாறிமாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News