உள்ளூர் செய்திகள்

வேலூரில் கட்டுமான தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் தொழில் பயிற்சி

Published On 2023-01-21 09:10 GMT   |   Update On 2023-01-21 09:10 GMT
  • 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்திருக்க வேண்டும்
  • வேலை இழப்பு ஏற்படுவதை ஈடுசெய்ய தலா ரூ.800 வழங்கப்படும்

வேலூர்:

வேலூர் தொழிலாளர் உதவி ஆணையர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் உருவாக்கப்பட்டு, அதனுடன் 18 வகை தொழிலாளர் நலவாரி யங்கள் செயல்படுகிறது.

இதில் உறுப்பினராக 18 முதல் 60 வயது வரை உள்ள தொழிலாளர்கள் பதிவு செய்து அரசின் நலத்திட்டத்தை பெறுகின்றனர்.

இவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். உறுப்பினர்களுக்கு திருமணம், மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது.

மேலும், கொத்தனார், பற்றவைப்பவர்கள், மின்சார வேலை, குழாய் பொருத்துனர், மரவேலை மற்றும் கம்பி வளைப்பவர்கள் உட்பட பல தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு கட்டுமான கழகம் மூலம் 3 மாத திறன் பயிற்சி, ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படவுள்ளது.

3 மாத கால பயிற்சியில் முதல் மாதம் தையூரில் அமையவுள்ள கட்டுமான கழக பயிற்சி நிறுவனத்திலும், 2-வது மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் நீவலூரில் உள்ள எல் அண்ட் டி., கட்டுமான திறன் பயிற்சி நிலையத்திலும் பயிற்சி வழங்கப்படும்.

பயிற்சி பெறவுள்ளவர்கள் 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அல்லது ஐ.டி.ஐ. படித்திருக்க வேண்டும்.

18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பயிற்சி கட்டணம், உணவு, தங்குமிடம் இலவசம் பயிற்சி பெறுவோருக்கு எல் அண்ட் டி., நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். மேலும்

ஒரு வார பயிற்சி, தையூரில் கட்டுமான கழகம் வழங்கும், 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த பயிற்சி பெறலாம். பயிற்சி பெறுபவர்களுக்கு தினமும் வேலை இழப்பு ஏற்படுவதை ஈடுசெய்ய தலா ரூ.800 வழங்கப்படும்.

இந்த தொகையில் உணவுக்கு மட்டும் பிடித்தம் செய்யப்படும். எனவே தகுதியானவர்கள் அம்மன் நகர், மேல்மொணவூர், அப்துல்லாபுரம் வேலூர் 632 010 என்ற முகவரியில் உள்ள வேலூர், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் படிவம் பூர்த்தி செய்து வழங்கலாம். மேலும் விவரங்களுக்கு 0416-2292212 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News