உள்ளூர் செய்திகள்

கிராம சபை கூட்டம்

Published On 2022-10-03 15:22 IST   |   Update On 2022-10-03 15:22:00 IST
  • குடியாத்தம் குளிதிகை ஊராட்சியில் நடந்தது
  • அமலு விஜயன் எம்.எல்.ஏ பங்கேற்பு

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் குளிதிகை ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுமித்ராபாபு தலைமை தாங்கினார்.ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேன்மொழி ரமேஷ் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆனந்தி முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிராம சபை கூட்டத்தில் ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது, தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் ஊராட்சி பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி மன்ற செயலாளர் சி.ரமேஷ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News