உள்ளூர் செய்திகள்

வேலூர் மாநகராட்சி புதிய கமிஷனர் ரத்தினசாமி பொறுப்பேற்பு

Published On 2023-02-03 10:22 GMT   |   Update On 2023-02-03 10:22 GMT
  • புகார்கள் இருந்தால் நேரடியாக என்னை சந்தித்து தெரிவிக்கலாம்
  • மாநகராட்சி ஊழியர்கள் நேர்மையுடன் பணியாற்ற அறிவுறுத்தல்

வேலூர்:

வேலூர் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த அசோக்குமார் இடமாற்றம் செய்யப்ப ட்டார். அவருக்கு பதில் சென்னை சிப்காட் பொது மேலாளராக பணியாற்றி வந்த பி.ரத்தினசாமி வேலூர் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

இன்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

நாம் மக்களுடன் நேரடி தொடர்பில் பணியாற்றி வருகிறோம். நாம் அனைவரும் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும். புகார்கள் ஏதும் வரக்கூடாது.புகார்கள் வராமல் செயல்பட வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு வர வேண்டும்.மக்களை நாம் சந்திக்கும்போது பொறுமை யுடன் மக்களிடம் பேச வேண்டும். சிறப்புடன் பணியாற்றுங்கள். தங்களது தனிப்பட்ட குறைகள் மற்றும் புகார்கள் இருந்தால் நேரடியாக என்னை சந்தித்து தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News