உள்ளூர் செய்திகள்

வேலூர் ஜெயில் கைதி திடீர் சாவு

Published On 2022-08-22 16:02 IST   |   Update On 2022-08-22 16:02:00 IST
  • குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்
  • போலீசார் விசாரணை

வேலூர்:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 35) சாராயம் விற்பனை தொடர்பாக குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

கடந்த 11-ந் தேதி இவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பரமசிவம் இன்று காலை இறந்தார்.

இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். .

Tags:    

Similar News