உள்ளூர் செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் போலீசார் ரோந்து, வாகன தணிக்கையில் குற்றவாளிகளை பிடிக்க புதிய ஆப் அறிமுகம்

Published On 2022-11-30 15:37 IST   |   Update On 2022-11-30 15:37:00 IST
  • 552 பேரின் புகைப்படங்களை ஒப்பீடு செய்தனர்‌
  • ஒருவரை கைது செய்து விசாரணை

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்றங்களை தடுக்கவும் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன், இரவு ரோந்து வாகன தணிக்கை, தங்கும் விடுதிகள் தணிக்கையின் போது சந்தேகப்படும் நபர்களை அடையாளம் காணும் பேஸ் சாப்ட்வேர் ஆப் மூலம் செல்போனில் புகைப்படம் எடுத்து அவர்களின் குற்றப்பின்னணி குறித்து அறிய ஒப்பீடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்பேரில் நேற்று இரவு ரோந்தின் போது மாவட்டம் முழுவதும் மொத்தம் 552 நபர்களின் புகைப்படங்களை சந்தேகத்தின் பேரில் பேஸ் சாப்ட்வேர் ஆப்பில் ஒப்பீடு செய்தனர்‌.

பேரணாம்பட்டில் உள்ள விடுதியில் தங்கியிருந்த வேலூர் சின்ன அல்லா புரத்தைச் சேர்ந்த சசிகுமார் (வயது 43) என்பவரை ஒப்பீடு செய்ததில் அவர் மீது 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

அவர் மீது 2 வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக உள்ளதும் தெரிய வந்தது.

பின்னர் அவரை கைது செய்தது. என்ன காரணத்திற்காக பேரணாம்பட்டு விடுதியில் தங்கியிருந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News