உள்ளூர் செய்திகள்
அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்தது
- கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு எச்.எம்.எஸ். தொழிலாளர்கள் சங்க மாநில செயலாளர் திருப்பதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கலைவாணி முன்னிலை வகித்தார்.
அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கீதா கோரிக்கை குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். மாநில சட்டங்களை பாதுகாக்க வேண்டும்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்த 36 நல வாரியங்களை பாதுகாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.