உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

டிப்பர் லாரி மோதி வாலிபர் சாவு

Published On 2022-06-05 16:32 IST   |   Update On 2022-06-05 16:32:00 IST
  • 2 பேர் படுகாயம்
  • லாரி டிரைவர் தப்பி ஓட்டம்

வேலூர்:

மேல்விஷாரம் பகுதியை சேர்ந்தவர் அக்பர்பாஷா. இவரது மகன் அப்துல்ஜலால் (வயது 18).

இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களான அப்துல்ரகுமான், அங்சலா ஆகியோருடன் மோட்டார்சைக்கிளில் ரத்தினகிரியை அடுத்த மேலகுப் பம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது முன்னால் சென்ற டிப்பர் லாரியை முந்திச் செல்ல முயன்றபோது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது.

இதில் அப்துல்ஜலால் சம் பவ இடத்திலேயே பரிதாப மாக இறந்தார். மற்ற 2 பேரும் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 2 பேரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அப்துல் ஜலால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர் .

Tags:    

Similar News