உள்ளூர் செய்திகள்

ஆற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

Published On 2022-10-03 15:19 IST   |   Update On 2022-10-03 15:19:00 IST
  • பிணமாக மீட்டனர்
  • போலீசார் விசாரணை

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சூராளூர் நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சபாபதி (வயது 46). கூலி தொழிலாளி நேற்று மாலையில் தனது கிராமத்து அருகே செல்லும் கொட்டாற்றில் தவறி விழுந்துள்ளார்.

கொட்டாற்றில் சபாபதி தவறி விழுந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக அவரது உறவினர்களுக்கு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உறவினர்கள் சபாபதி கொட்டாற்றில் இருந்து பிணமாக மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா போலீசில் சபாபதியின் மனைவி துளசி அளித்த புகாரின் பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப் இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் வழக்கு பதிவு செய்து சபாபதியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News