உள்ளூர் செய்திகள்
- பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி
- யார் அவர்? விசாரணை
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா அடுத்த கிங்கினி அம்மன் கோவில் அருகே 38 வயது மதிக்கத்தக்க ஒருவர் நேற்று முன்தினம் பைக்கில் இருந்து தவறி சாலை ஓரம் விழுந்து கிடந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் அந்த வழியாக வந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து யார் அவர் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.