உள்ளூர் செய்திகள்

கால்வாயில் விழுந்து வாலிபர் சாவு

Published On 2023-01-03 10:13 GMT   |   Update On 2023-01-03 10:13 GMT
  • புத்தாண்டு தினத்தில் அதிக மது குடித்த நிலையில் விபரீதம்
  • போலீசார் விசாரணை

வேலூர்:

வேலூர் கொசப்பேட்டை அவல்காரர் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 38). இவரது மனைவி மோனிகா தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர்.

குடி பழக்கத்திற்கு ஆளான அருண்குமார் வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனால் மோனிகா கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார்.

கடந்த புத்தாண்டு தினத்தன்று இரவு அருண்குமார் அளவுக்கு அதிகமாக மது குடித்தார்.

வீட்டின் அருகே நடந்து சென்ற அவர் அந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் தவறி விழுந்தார்.

இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் மோனிகா அவரை தேடிச் சென்றார்.அப்போது கால்வாயில் அருண்குமார் விழுந்து கிடந்தை கண்டு திடுக்கிட்டார்.

உடனடியாக அவரை மீட்டு வேலூர் பென்ட்லெண்ட் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அருண்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் வேலூர் தெற்கு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News