உள்ளூர் செய்திகள்

பாட்டிலால் குத்தப்பட்ட வாலிபர் சாவு

Published On 2023-08-19 08:21 GMT   |   Update On 2023-08-19 08:21 GMT
  • சிகிச்சை பலனின்றி பறிதாபம்
  • ஒருவர் கைது

வேலூர்:

வேலூர் காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 19). மேளம் அடிக்கும் தொழிலாளி.

இவர் சத்துவாச்சாரி வ.உ.சி. நகரில் வசித்து வந்தார். கடந்த 9-ந் தேதி காகிதப்பட்டறையில் ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மன் கோவில் திருவிழா நடந்தது. கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கொள்வதற்காக ஆகாஷ் காகிதப்பட்டறை வந்தார்.

அப்போது ஆகாசுக்கும் காகிதப்பட்டரையை சேர்ந்த ராஜேஷ் (23) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் மது பாட்டிலை உடைத்து ஆகாஷ் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த ஆகாஷ் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷை கைது செய்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆகாஷ் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து வேலூர் வடக்கு போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்தனர்.

Tags:    

Similar News