உள்ளூர் செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் பணியிட மாற்றம்

Published On 2023-08-24 14:45 IST   |   Update On 2023-08-24 14:45:00 IST
  • பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டம்
  • பல மணி நேரத்திற்கு பிறகு கலைந்து சென்றனர்

குடியாத்தம்:

குடியாத்தம் நடுப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் லத்தேரியை அடுத்த செஞ்சி பகுதியைச் சேர்ந்த கே.ராமன் (வயது 44) என்பவர் பட்டதாரி அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன் தினம் ஒரு மாணவி ஆசிரியர் ராமன் தன்னிடம் சில்மிஷம் செய்ய முயன்றதை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் உடனடியாக பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியையிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் ஆசிரியர் ராமனிடம் விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தலைமை ஆசிரியை அகிலா தகவல் தெரிவித்தார்.

பள்ளியில் மாணவியிடம், ஆசிரியர் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் சக மாணவிகள் மற்றும் பெற்றோர் மத்தி யில் பரவியது. இதனால் பெற்றோர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்கு திரண்டு வந்து முற்றுகையில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து பள்ளியில் தலைமை ஆசிரியை ஜி.அகிலா, மாவட்ட கல்வி அலுவலர் எம்.அங்குலட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாமளா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் எம்.எஸ்.அமர்நாத், ஜி.எஸ். அரசு மற்றும் பிரமுகர்கள் பள்ளி வளாகத்தில் விசா ரணை நடத்தினர்.

தொடர்ந்து பெண் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸ் அதிகாரிகள் மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர் ராமன் சில்மிஷம் செய்ததாக ஏராளமான மாணவிகள் குற்றம் சாட்டினார்கள்.

மேலும் மாலை வரை போராட்டம் நடைபெற்றதால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.மணிவண்ணன், போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம், ஆசிரியர் ராமன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல மணி நேரத்திற்கு பிறகு கலைந்து சென்றனர்.

இதனையடுத்து மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற ஆசிரியர் பொன்னை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு இன்று பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News