உள்ளூர் செய்திகள்

சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

Published On 2022-08-13 14:48 IST   |   Update On 2022-08-13 14:48:00 IST
  • மீறி விற்பனை செய்தால் குற்றவியல் நடவடிக்கை
  • கலெக்டர் அறிவிப்பு

வேலூர்:

இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா நாளை மறுதினம் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுபான பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது.

அதையும் மீறி விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையா ளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுபான பார்கள் திறக்கப்பட்டு இருந்தாலும், பாரில் மது பான விற்பனை செய்வது தெரிய வந்தாலும் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், ரத்து செய்தல் மற்றும் மதுக்கூட உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News