உள்ளூர் செய்திகள்

வேலூர் தொரப்பாடி அரசு பள்ளியில் மேஜை, நாற்காலிகள் திருட்டு

Published On 2023-01-05 15:20 IST   |   Update On 2023-01-05 15:20:00 IST
  • பூட்டைஉடைத்து துணிகரம்
  • போலீசார் விசாரணை

வேலூர்:

வேலூர் அடுத்த தொரப்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

இங்கு சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் சேதம் அடைந்த மேைஜ, நாற்காலிகள் அங்குள்ள வகுப்பறையில் வைக்கப்பட்டு இருந்தன. நேற்று வகுப்புகள் முடிந்து வழக்கம் போல் ஆசிரியர்கள் பள்ளியை பூட்டி விட்டு சென்றனர்.

இன்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் அங்குள்ள அறையின் பூட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த மேஜை, நாற்காலிகள் திருடு போனதை கண்டு திடுக்கிட்டனர்.

இது குறித்து பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News