வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் உதவியாளர் திடீர் சாவு
- மயங்கி கீழே விழுந்தார்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் சாய்நாதபுரம் நடேசமுதலியார் தெருவை சேர்ந்தவர் பிரகாசம். இவரது மனைவி செல்வி (வயது 55). இவர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இன்று காலை வழக்கம்போல அலுவலத்திற்கு பணிக்கு வந்தார். பின்னர் அவர் 3-வது தளத்தில் உள்ள தன் பணி இடத்துக்கு சென்றார். அப்போது வளாகத்தில் எதிர்பாராதவிதமாக திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தனர். அப்போது அவர் இறந்தது தெரியவந்தது. இதனிடையே சத்துவாச்சாரி போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து 108 ஆம்புலன்சில் உடலை அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.