உள்ளூர் செய்திகள்

கல்வி உதவித் தொகை பெற மாணவர்கள் வங்கி கணக்கு தொடங்க வேண்டும்

Published On 2023-05-12 06:49 GMT   |   Update On 2023-05-12 06:49 GMT
  • கலெக்டர் அறிவுறுத்தல்
  • ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது

வேலுார்:

ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற வசதியாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு இல்லாத மாணவர்களுக்கு, தபால் துறை யின் கீழ் செயல்படும் 'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி' மூலம், பள்ளிகளி லேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இப்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு இல்லாத மாணவர்கள், அருகில் உள்ள தபால் நிலையங்கள் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள 'ஸ்மா ர்ட் போன்' மற்றும் பயோ மெட்ரிக் சாத னம் மூலம், தங்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்ணை மட்டும் பயன்படுத்தி, விரல்ரேகை மூலம் ஆதார் இணைப் புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்கி கொள்ளலாம்.

இந்த வசதி ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News