- குடியாத்தத்தில் நடந்தது
- பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்
குடியாத்தம்:
குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கல்லப்பாடி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மாணவிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.எஸ்.அமர்நாத் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, நகர்மன்ற உறுப்பினர்கள் இ.ஜாவித்அகமது, ஜி.எஸ்.அரசு, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் ஆடிட்டர் மோகன், எம்.என். ஜோதிகுமார் உள்பட பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் ஜெயஸ்ரீகிறிஸ்டி அனைவரையும் வரவேற்றார்.
மருத்துவ முகாமை குடியாத்தம் அமலு விஜயன் எம்.எல்.ஏ, நகர்மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.விமல் குமார் தலைமையில் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்பட 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை, மருத்துவ ஆலோசனை, ரத்த வகை கண்டறிதல், ரத்த சோகை குறித்து கண்டறிதல் உள்ளிட்ட சிகிச்சை அளித்தனர். இதில 600 மாணவிகள் பயன்பெற்றனர்.