உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் அடுத்த பரதராமியில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்த காட்சி.

சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2022-08-01 09:28 GMT   |   Update On 2022-08-01 09:28 GMT
  • 922 பேருக்கு சிகிச்சை அளித்தனர்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

குடியாத்தம்:

குடியாத்தம் தாலுகா பரதராமி ஊராட்சியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.மருத்துவ முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கேசவவேலு தலைமை தாங்கினார்.

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குசலகுமாரிசேகர், ஒன்றிய குழு உறுப்பினர்கள் இந்திராகாந்தி, தியாகராஜன், முன்னாள் ஒன்றியகுழு உறுப்பினர்கள் ஏ.ஜே. பத்ரிநாத், கே.ரமேஷ் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் விமல்குமார் அனைவரையும் வரவேற்றார்.வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் கலந்துகொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். பரதராமி மருத்துவ அலுவலர் ஞானப்பிரியா தலைமையில் மருத்துவ குழுவினர் 922 பேருக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்தனர். முகாமில் திமுக பேச்சாளர் குடியாத்தம்குமரன், தாட்டிமானபல்லி ஊராட்சி மன்ற தலைவர் சக்திதாசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாந்திமகாலிங்கம், ஊராட்சி மன்ற செயலாளர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News