உள்ளூர் செய்திகள்

தொழில் முனைவோருக்கு சிறப்பு தொழில் கடன் முகாம்

Published On 2022-08-16 14:37 IST   |   Update On 2022-08-16 14:37:00 IST
  • நாளை தொடங்குகிறது
  • கலெக்டர் அறிவிப்பு

வேலூர்:

தொழில் முனைவோருக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் காட்பாடியில் வருகிற நாைள புதன்கிழமை தொடங்குகிறது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளுக்கு கடனுதவிகளை வழங்கி வருகிறது. இந்த கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

இந்த நிலையில் காட்பாடி காந்திநகரில் உள்ள தொ-ழில் முதலீட்டு கழக வேலூர் கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் வருகிற நாைள புதன்கிழமை தொடங்குகிறது.

இந்த சிறப்பு தொழில் கடன் முகாமில் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் போன்றவை குறித்து விளக்கங்கள் தரப்படும். தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம் ரூ.1 கோடியே 50 லட்கம் வரை கிடைக்கும்.

முகாமில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். இதனை தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றம் அரசின் மானிய சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News