உள்ளூர் செய்திகள்

விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் இடங்களை எஸ்.பி.ஆய்வு

Published On 2022-08-23 16:59 IST   |   Update On 2022-08-23 17:06:00 IST
  • குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதியில் பார்வையிட்டார்
  • சோதனைச்சாவடியில கண்காணிப்பை பலப்படுத்த உத்தரவு

குடியாத்தம்:

குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதியில் விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்கள், விநா யகர் சிலை ஊர் வலம் நடைபெ றும் இடங்களை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நேற்று ஆய்வு செய்தார்.

விநாயகர் சிலைகள்

பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் வரும் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுவதையொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உள்ளூர் போலீசாருக்கு அவர் ஆலோசனை நடத்தினார்.

கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு பேரணாம்பட்டில் விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்கள், விநா யகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் இடங்களான திரு.விக நகர், நெடுஞ்சாலை, பஸ் நிலையம், நான்கு கம்பம் மற்றும் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் பத்தரபல்லி அணைப் பகுதி ஆகிய இடங்களை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக எல்லையான பத்தரபல்லியில் போலீஸ் சோதனைச் சாவ டிக்குச் சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை சரிபார்த் தார். ஆந்திரத்தில் இருந்து பத்தரபல்லி வழியாக தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வாகனங்களில் கடத்தப்படுகிறதா? என தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறைக்குச் சென்ற அவர் அங்கு விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடங்களை பார்வையிட்டார். அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போதைப் பொருள் தடுப்பு குறித்து மாணவர்களிடையே பேசினார்.

Tags:    

Similar News