உள்ளூர் செய்திகள்

காரில் கடத்திய கள்ள சாராயம் பறிமுதல்

Published On 2022-12-25 14:12 IST   |   Update On 2022-12-25 14:12:00 IST
  • 450 லிட்டர் சிக்கியது
  • 3 பேர் கைது

வேலூர்:

வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் நேற்று இரவு வேலூர் ஆரணி சாலையில் வல்லம் டோல்கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது வாகன பதிவு எண் இல்லாமல் வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி காரில் சோதனை நடத்தினர். காரில் இருந்த 3 பேர் தப்பி ஓட முயன்றனர் அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

காரில் சோதனை செய்தபோது தல 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 லாரி டியூப் களில் 450 லிட்டர் கள்ள சாராயம் கடத்தியது தெரிய வந்தது.

இதையடுத்து காரில் கள்ள சாராயம் கடத்தி வந்த கீழ் பள்ளிப்பட்டை சேர்ந்த ராம்குமார் (வயது 45), தெல்லையை சேர்ந்த ராமு (30), அமிர்தியை சேர்ந்த செல்வம் (55) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News