உள்ளூர் செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவிகள் மாயம்

Published On 2023-09-14 09:56 GMT   |   Update On 2023-09-14 09:56 GMT
  • பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை
  • போலீசில் புகார்

வேலூர்:

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. மாணவியை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து மாணவியின் தாய் அணைக்கட்டு போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

இதேபோல் காட்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் காட்பாடியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை மாணவியின் தாய் மாணவியை பள்ளியில் விட்டு சென்றார்.

பின்னர் மாணவி வீடு திரும்பவில்லை இது குறித்து மாணவியின் தாய் காட்பாடி போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News