உள்ளூர் செய்திகள்

குடியாத்தத்தில் காங்கிரஸ் கட்சியின் வேலூர் மாவட்ட நெசவாளர் அணி கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

மழையால் பாதிக்கப்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்

Published On 2022-12-20 10:03 GMT   |   Update On 2022-12-20 10:03 GMT
  • காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
  • எராளமானோர் கலந்து கொண்டனர்

குடியாத்தம்:

குடியாத்தத்தில் வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் நெசவாளர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட நெசவாளர் அணி தலைவர் எஸ்.எம்.தேவராஜ் தலைமை தாங்கினார்.

நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரங்கநாதன், காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகள் சரத் சந்தர், கோதண்டம், கந்தன், ரகுமான், சுல்தான் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

நகர காங்கிரஸ் நெசவாளர் அணி தலைவர் ஜெயவேலு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நெசவாளர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் நய்யீம்பர்வேஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் சில நாட்களாக பெய்த கனமழையால் நெசவாளர்களின் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது மேலும் நெசவாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.தமிழக அரசு உடனடியாக கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கு மழை நிவாரணமாக 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.

கைத்தறி நெசவாளர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப தற்போது வழங்கி வரும் கூலியுடன் அகவிலைப்படி 10 சதவீதமும், அடிப்படை கூலி 20 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும்.

குடியாத்தம் பிச்சனூர் கங்காதரசுவாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக நடப்பு கல்வி ஆண்டிலேயே தமிழக அரசு பள்ளியை தரம் உயர்த்த கேட்டுக் கொள்வது.

கைத்தறி நெசவாளர்களுக்கு வழக்கப்படும் மின் கட்டணம் அதிகமாக உள்ளதாலும் நெசவாளர்களின் அடிப்படை கூலியில் கணக்கிட்டால் மின்சாரத்திற்கே நிறைய செலவிட வேண்டிய சூழ்நிலை உள்ளது எனவே பழைய முறைப்படி மாதாந்திர மின் கட்டண கணக்கீடு முறையை நடைமுறை நடைமுறைப்படுத்த வேண்டும்.

குடியாத்தம் அரசு பொது மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டும், இன்று வரை எந்தவிதமான முன்னேற்றம் இல்லாமல் அப்படியே உள்ளது எனவே பொது ளின் நலனை கருத்தில் கொண்டு அரசு பொது மருத்துவமனையை உடனடியாக மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்திட வேண்டும்.

குடியாத்தம் பிச்சனூர் பலமநேர் சாலை அரசமரம் பகுதியில் விபத்து நடக்காமல் இருக்க போக்குவரத்துக் காவலரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News