உள்ளூர் செய்திகள்

வாடகை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்த காட்சி.

வாடகை செலுத்தாத 12 கடைகளுக்கு சீல்

Published On 2023-01-20 15:11 IST   |   Update On 2023-01-20 15:11:00 IST
  • மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
  • கடைகள் உள்வாடைகை விடப்பட்டுள்ளதா என ஆய்வு

வேலூர்:

வேலூர் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட கடைகள் மாநகராட்சி சார்பில் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில் ஏராளமானோர் பாக்கி வைத்துள்ளனர்.

தற்போது மாநகராட்சி ஊழியர்கள் மூலம் வாடகை வசூல் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.

நீண்ட நாட்களாக வரிபாக்கியுள்ள கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கை யில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மாநகராட்சி நான்காவது மண்டல இளநிலை பொறியாளர் சீனிவாசன் உதவி வருவாய் அலுவலர் தனசேகர் மற்றும் உதவியாளர்கள் இளஞ்சேரன் விஜயகுமார் ஆகியோர் இன்று காலை வேலூர் திருப்பதி தேவஸ்தானம் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 12 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

மேலும் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்வாடைகை விடப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். கடைகள் உள் வாடகைக்கு விடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த கடைகள் பறிமுதல் செய்யப்படும்.

நீண்ட நாட்கள் வாடகை பாக்கி உள்ள கடைகளுக்கு உடனடியாக சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News