உள்ளூர் செய்திகள்

12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி

Published On 2023-06-08 08:47 GMT   |   Update On 2023-06-08 08:47 GMT
  • கலெக்டர் தொடங்கி வைத்தார்
  • கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி நடந்தது

வேலூர்:

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் வேலூர் காகிதப்பட்டறையில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடந்தது.

இந்நிகழ்ச்சுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தனசேகர், உதவி கோட்டை பொறியாளர் பிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இளநிலை பொறியாளர் விஜயா முன்னிலை வகித்தார். கலெக்டர் குமாரவேல் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலை ஓரங்களில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் செந்தில் மாநகராட்சி கவுன்சிலர் மம்தா குமார், 2-வது மண்டல சுகாதார அலுவலர் லூர்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News