குண்டு வெடித்து பலியான மாடுகள் உடல் பரிசோதனை
- 2 பேரை பிடிக்க தீவிரம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த புதூர் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மகன் செல்வம். இவர் புதூர் ஏரிக்கரை ஓரம் மாந்தோப்பு வைத்துள்ளார். அந்த தோப்பில் அதே பகுதியை சேர்ந்த சின்னபையன் காளை மாடு மற்றும் சேட்டு என்பவரின் பசுமாடு மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் மாடுகளின் வாய் பகுதி மற்றும் தலை வெடித்து சிதறியது. சிறிது நேரம் உயிருக்கு போராடிய மாடுகள் பரிதாபமாக இறந்தது.
இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
குண்டு வைத்த மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
பலியான மாடுகளின் உடல் பிரேத பரிசோதனை இன்று செய்யப்பட்டது. மேலும் வெடி குண்டு வைத்ததாக மலை கிராமத்தை சேர்ந்த 2 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.