உள்ளூர் செய்திகள்

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீடு.

நகை அடகு வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

Published On 2022-06-27 10:18 GMT   |   Update On 2022-06-27 10:18 GMT
  • மர்ம நபர்கள் பணம் கேட்டு மிரட்டல்.
  • போலீசார் விசாரணை

வேலூர்:

வேலூர் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்தவர் மகேஷ் குமார் அவரது வீட்டை ஒட்டியே நகை அடகு கடை வைத்துள்ளார்.

இன்று காலை அவரது வீட்டின் முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர்.சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்து சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மகேஷ்குமாரிடம் மர்ம நபர்கள் சிலர் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

அவர் பணம் தர மறுத்ததால் அவரது வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News