உள்ளூர் செய்திகள்

பைக் மீது லாரி மோதி ஒருவர் பலி

Published On 2022-10-05 15:44 IST   |   Update On 2022-10-05 15:44:00 IST
  • ராணுவ வீரர் ஆஸ்பத்திரியில் அனுமதி
  • போலீசார் விசாரணை

பொன்னை:

காட்பாடி தாலுகா வள்ளிமலை அடுத்த மேல்போடிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். விவசாயி. இவரது மகன் தமிழ்ச்செல்வன்(21), கல்லுாரி மாணவன்.

அதே பகுதியைச் சேர்ந்த அரிதாஸ் (24) ராணுவ வீரர். இவர்கள் இருவரும் நேற்று மாலை மேல்போடிநத்தம் கிராமத் தில் இருந்து அருகில் உள்ளராமாபுரம் கிராமத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே மண் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி பைக் மீது மோதிய விபத்தில் தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே இறந்தார். ராணுவ வீரர் அரிதாஸ் கால்களில் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மேல்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மேல்பாடி போலீசார் மாண வன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலுார் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News